|
என்னை மறந்தனையோ
ஏக்கச் சிறகுகள் எடுத்து
ஏமாற்ற வானில் பறந்து
என்னுள் புதைந்தேன்
என்னை மறந்தனையோ ?
கண்களைத் தாவ விட்டு - என்
தாவணி மேய விட்டு
தென்றலைத் தூது விட்டு
நெஞ்சினைத் தவிக்க விட்டு
பூக்களை
பறித்து
பூவிதழ் மருவி - கள்வன்
புன்னகை புரிந்ததும் ஏனோ
புண்ணாக்கி மறைந்ததும்....
நினவுகளின் மத்தியிலே
நீந்தியவன் தேனெந்தன்
கனவுகளின் கானகத்தே
கணாமல் போனவனோ ?
மறைந்திருந்து
பார்க்கையிலே
மந்தகாசப் புன்னகையால்
மயக்கி எனை மையலிலிட்டு
மறந்து இன்று சென்றனையோ
வரும்
வழியோரம்
பாத்திருந்து - என்
விழியோரம் பூத்திருக்கும்
பாதையே இன்று வெறிச்சோடி
கண்ணீர்ப்பூக்கள்
நிறைந்திருக்கு
வேகமாய்
வளர்ந்த காதல்
வெறுமையாய் போனதென்ன
வேதனையின் விளிம்பிலே
வெம்பி நானும் கரைவதென்ன...
ஒன்று
கேட்பேன் உரைப்பாயே
ஒளிக்காமல் திறப்பாயே மனதை
காளையுனக்கு
காணிக்கையாக்கிய பின்
கன்னி என்னை மறந்தனையோ ? ....
கவிதை :
சக்தி
சக்திதாசன் |